செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற வாலிபர் கைது

Published On 2017-10-20 14:22 GMT   |   Update On 2017-10-20 14:22 GMT
வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்னர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் நாச்சிமுத்து தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது30) இவர் மூலியமங்கலம் பிரிவு அருகில் உள்ள ஒரு கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்துவந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News