செய்திகள்

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த காண்டிராக்டரை தாக்கிய போலீஸ்காரர் கைது

Published On 2017-10-20 10:56 GMT   |   Update On 2017-10-20 10:56 GMT
மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த காண்டிராக்டரை, போலீஸ்காரர் தாக்கிய சம்பவம் குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை:

கோவை கோவில் பாளையம் அருகே உள்ள ஏ.எஸ். குளத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 38). காண்டிராக்டர்.

சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (24). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரர் மோகன பிரபாகரன் (26). ஆகியோர் நடராஜிடம் மது குடிக்க பணம் கேட்டனர்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து நடராஜை தாக்கினர். பின்னர் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர்.

இது குறித்து நடராஜ் கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜை தாக்கிய போலீஸ்காரர் தமிழ்செல்வன், அவரது சகோதரர் மோகன பிரபாகரன் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News