செய்திகள்

திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மோசடி: மேலாளர் கைது

Published On 2017-10-20 08:20 GMT   |   Update On 2017-10-20 08:20 GMT
திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்காளூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதிநிறுவனம் உள்ளது.

இங்கு ஊத்துக்கோட்டையை அடுத்த வேலகாபுரத்தை சேர்ந்த சிவபிரகாசம் மேலாளராக இருந்தார்.

நிதி நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் சரிபார்த்த போது சிவபிரகாசம் ரூ. 3 லட்சத்து 34 ஆயிரம் கையாடல் செய்து இருப்பது தெரிந்தது.

இது குறித்து திருவள்ளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News