செய்திகள்

கடலை மிட்டாய் என நினைத்து குடிபோதையில் எலி கேக்கை தின்ற தச்சு தொழிலாளி பலி

Published On 2017-10-10 10:54 GMT   |   Update On 2017-10-10 10:54 GMT
கடலை மிட்டாய் என நினைத்து குடிபோதையில் எலி கேக்கை தின்ற தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:

திண்டிவனம் காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 31) தச்சு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் புதுவைக்கு தினமும் வந்து தச்சு தொழில் செய்வது வழக்கம். வேலை முடிந்ததும் மாலையில் மது குடித்து விட்டு லட்சுமணன் வீட்டுக்கு செல்வார்.

இந்த நிலையில் வீட்டில் எலி தொல்லை இருந்ததால் எலியை ஒழிக்க சம்பவத்தன்று புதுவையில் ஒரு மருந்து கடையில் எலி மருந்தை வாங்கிய லட்சுமணன் அதனை கால்சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டார்.

பின்னர் மது கடைக்கு செல்லும் வழியில் பெட்டிக்கடையில் கடலை மிட்டாயை வாங்கி அதே பாக்கெட்டில் வைத்தார்.

இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மது கடைக்கு சென்று லட்சுமணன் மது குடித்தார். அங்கு குடிபோதையில் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த எலி கேக்கை கடலை மிட்டாய் என நினைத்து தின்று விட்டார்.

இதில், மயங்கி விழுந்த லட்சுமணனை அவருடன் வந்த மற்ற தொழிலாளிகள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எலி கேக்கை தின்று பலியான லட்சுமணனுக்கு திருமணமாகி நித்யா (24) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News