செய்திகள்

காதல் தம்பதியினர் விவாகரத்து கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு

Published On 2017-09-22 12:03 GMT   |   Update On 2017-09-22 12:03 GMT
காதல் திருமணம் செய்த தம்பதி விவாகரத்து கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் ஆர்.வி.நகரை சேர்ந்த மாதவி (வயது21). அழகுநிலையம் வைத்து நடத்தி வருகிறார். வடமதுரை அருகில் உள்ள வேல்வார் கோட்டை மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் கவுதம் (25). டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.

இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு மாதவி வீட்டில் எதிர்ப்பு வந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் கணவன்- மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாகவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலித்து திருமணம் செய்தாலும் ஒரு வருடத்திலேயே அவர்களது திருமண வாழ்க்கை கசந்துபோனது. இதனால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து மனு அளித்தனர்.

இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்வதாகவும் அதன் பின்னர் தாங்கள் வேறு திருமணம் செய்து கொண்டால் அதில் மற்றவர் தலையிட கூடாது என்றும் எழுதி அதன் பத்திரத்தை போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News