செய்திகள்

அருப்புக்கோட்டையில் இரும்பு கடையில் திடீர் தீ விபத்து

Published On 2017-09-21 11:05 GMT   |   Update On 2017-09-21 11:06 GMT
இரும்பு கடையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக புகார் கூறப்பட்டுள்ளது.
பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மணி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக, நெசவாளர் காலனியில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இவர் வெளியூர் சென்று உள்ளதால், இன்று காலை மாடசாமி வந்து கடையை திறந்தார். சிறிது நேரத்தில் டீ குடிப்பதற்காக அருகில் உள்ள கடைக்கு மாடசாமி சென்றார். டீ குடித்து விட்டு அவர் திரும்பியபோது, இரும்பு கடை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News