திருவோணம்:
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்து உள்ள இடையங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது40). கார் டிரைவர். இவருடைய மனைவி விஜயா (33). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விஜயாவின் தாயார் முத்தம்மாள் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் வட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தாரா? என்பது குறித்தும் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கோவிந்தராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.