செய்திகள்
நீட்டை எதிர்த்து ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவின் உணர்வை மதிப்போம்: ஸ்டாலின்
நீட் தேர்வை எதிர்த்து ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவின் உணர்வை மதிப்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இப்போராட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க மறுத்த காரணத்தினால் தன்னுடைய ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆசிரியை சபரிமாலா ராஜினாமா செய்தது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!" என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இப்போராட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க மறுத்த காரணத்தினால் தன்னுடைய ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆசிரியை சபரிமாலா ராஜினாமா செய்தது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!" என்று தெரிவித்துள்ளார்.