செய்திகள்

ஜவ்வாது மலை பீமன் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த டெய்லர் தவறி விழுந்து பலி

Published On 2017-09-06 15:12 GMT   |   Update On 2017-09-06 15:12 GMT
ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்த டெய்லர் தவறி விழுந்து இறந்தார்.
வாணியம்பாடி:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாதுமலை பீமன் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாபயணிகள் வருகை கணிசமாக உள்ளது.

வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆலங்காயம் வழியாக ஜவ்வாதுமலைக்கு செல்கின்றனர்.

வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த சுல்தான், அவரது மகன் முபாராக் (19) டெய்லர் உள்பட குடும்பத்துடன் நேற்று பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு ஆனந்தமாக குளித்தனர். முபாரக் செல்போனில் அங்குள்ள இயற்கை காட்சிகளை படம் பிடித்தார்.

தண்ணீர் கொட்டும் பாறைமீது ஏறி நின்றது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அப்போது தடுமாறி முபாரக் கீழே விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முபாரக் இறந்தார்.

இது குறித்து ஜவ்வாதுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News