செய்திகள்
சேலம் அருகே புரோட்டா மாஸ்டரை பாட்டிலால் குத்திய கணவன்-மனைவி கைது
சேலம் அருகே புரோட்டா மாஸ்டரை பாட்டிலால் குத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 45). இவர் சேலத்தில் ஓரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இவர் சேலம் பழைய பஸ்நிலையம் முன்பு உள்ள ஒரு கடையில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கும், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த முனியப்பன் (23), அவருடைய மனைவி கலா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பாட்டிலால் சுந்தர்ராஜனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன் மற்றும் கலா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.