செய்திகள்

தேனி அருகே வீடு புகுந்து 37 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2017-08-15 16:26 GMT   |   Update On 2017-08-15 16:26 GMT
தேனி அருகே வீடு புகுந்து 37 பவுன் நகைகள் கொள்ளையடித்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி:

தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. நகர் பின்புறம் முத்துநகரில் வசித்து வருபவர் அழகுராஜா. இவர் காமாட்சிபுரத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கன்னிகா (31). இவர்களது வீட்டில் இருந்த 37 பவுன், 2 கிராம் தங்க நகைகள் கொள்ளை போயின.

இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அழகுராஜா புகார் அளித்தார். கொள்ளை நடந்த காலமான கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இவர்களது வீட்டிற்கு வந்தவர்கள் யார்? யார்? என விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பரமன் மனைவி இந்திரா, கன்னிகாவின் தோழியான போடியை சேர்ந்த மணிவண்ணன் மனைவி புனிதா, எலக்டிரிசியன் தர்மர் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அவர்கள்தான் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News