செய்திகள்

வில்லாபுரம்: தீ சேலையில் பற்றியதில் படுகாயம் அடைந்த பெண் பலி

Published On 2017-08-14 10:35 GMT   |   Update On 2017-08-14 10:35 GMT
வில்லாபுரத்தில் கோவில் விளக்கு தீ சேலையில் பற்றி எரிந்த விபத்தில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவனியாபுரம்:

மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் திருஞானம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 58).

சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி வரும்போது அங்கிருந்த விளக்கு தீ கலைச்செல்வியின் சேலையில் பற்றியது.

இதை பார்த்த பக்தர்கள் தீயை அணைத்து கலைச்செல்வியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News