செய்திகள்
புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு டெங்கு காய்ச்சல்
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாக்டர்கள் வையாபுரி மணிகண்டனின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஜிப்மர் ஆய்வில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது ரத்த மாதிரி ஐதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
புதுவை முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாக்டர்கள் வையாபுரி மணிகண்டனின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஜிப்மர் ஆய்வில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது ரத்த மாதிரி ஐதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.