செய்திகள்

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் - அரசு பஸ் மோதல்: கட்டிட தொழிலாளி பலி

Published On 2017-07-22 14:15 GMT   |   Update On 2017-07-22 14:15 GMT
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குளச்சல்:

குளச்சலை அடுத்த பெத்தேல்புரம் பணிக் கன்முறிவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 49). இவர் கேரளாவில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு கிறிஸ்டோபர் வந்திருந்தார். இவரது மகள் குளச்சல் அருகே உள்ள ஒரு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தனது மகளை அழைத்து வருவதற்காக கிறிஸ்டோபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். ஆனால் அவரது மகள் கல்லூரி முடிந்து பஸ்சில் வீட்டிற்கு திரும்பிச் சென்று விட்டார்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் கிறிஸ்டோபர் வீடு திரும்பி வந்துகொண்டிருந்தார். மண்டைக்காடு அருகே லட்சுமிபுரம் சானல் கரை பகுதியில் வரும்போது எதிரே அரசு பஸ் ஒன்று திங்கள்நகரில் இருந்து மண்டைக்காடு ரோட்டில் வந்துகொண்டிருந்தது.

இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி கிறிஸ்டோபருக்கு தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் முத்துராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News