search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி பலி"

    • நின்று கொண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குழி தாலுகா குன்ன த்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனி வாசன் (வயது 48). இவரது உறவினர் திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளை யத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருண் (25) ஆகிய இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் வழக்க ம்போல் செங்கப்பள்ளியில் கட்டிட வேலை முடித்து வி ட்டு ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பெருந்து றைக்கு சென்று கொண்டிரு ந்தனர்.

    அப்போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொ ண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பா ராத விதமாக மோதியது. இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    பின்னர் அருணை ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இதையடு த்து விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கிருஷ்ண மூ ர்த்தி என்பவர் மீது நடவடி க்கை எடுக்க கோரி ஸ்ரீனி வாசன் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அத ன்பேரில் போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் அருகே தங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருக்கு

    சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சங்கர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சங்கர் வீட்டின் வெளியே படுத்து இருந்தார். நள்ளிரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.

    நேற்று காலை சங்கர் இல்லாததால், வீட்டு எதிரே கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்து திருப் பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி சங்கர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

    சென்னிமலை:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). கட்டிட தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று காலையில் அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காங்கேயம் ரோட்டில் அத்திக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×