search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A construction worker was killed"

    • நின்று கொண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குழி தாலுகா குன்ன த்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனி வாசன் (வயது 48). இவரது உறவினர் திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளை யத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருண் (25) ஆகிய இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் வழக்க ம்போல் செங்கப்பள்ளியில் கட்டிட வேலை முடித்து வி ட்டு ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பெருந்து றைக்கு சென்று கொண்டிரு ந்தனர்.

    அப்போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொ ண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பா ராத விதமாக மோதியது. இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    பின்னர் அருணை ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இதையடு த்து விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கிருஷ்ண மூ ர்த்தி என்பவர் மீது நடவடி க்கை எடுக்க கோரி ஸ்ரீனி வாசன் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அத ன்பேரில் போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    ×