என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி பலி"

    • தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் அருகே தங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருக்கு

    சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சங்கர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சங்கர் வீட்டின் வெளியே படுத்து இருந்தார். நள்ளிரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.

    நேற்று காலை சங்கர் இல்லாததால், வீட்டு எதிரே கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்து திருப் பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி சங்கர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நின்று கொண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குழி தாலுகா குன்ன த்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனி வாசன் (வயது 48). இவரது உறவினர் திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளை யத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் அருண் (25) ஆகிய இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் வழக்க ம்போல் செங்கப்பள்ளியில் கட்டிட வேலை முடித்து வி ட்டு ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பெருந்து றைக்கு சென்று கொண்டிரு ந்தனர்.

    அப்போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொ ண்டிருந்த லாரி மீது அருண் ஒட்டி வந்த பைக் எதிர்பா ராத விதமாக மோதியது. இதில் அருண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    பின்னர் அருணை ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இதையடு த்து விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கிருஷ்ண மூ ர்த்தி என்பவர் மீது நடவடி க்கை எடுக்க கோரி ஸ்ரீனி வாசன் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அத ன்பேரில் போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

    சென்னிமலை:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). கட்டிட தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று காலையில் அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காங்கேயம் ரோட்டில் அத்திக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    கோவையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கோவை:

    பெங்களூர் அருகே உள்ள இளநல்லியை சேர்ந்தவர் வசீர். இவரது மகன் நயாத் மாபிசா (34). இவர் கோவை பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள ராமலட்சுமி நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் 3 மாடியில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. ஒரு மாடியில் இருந்த அடுத்த மாடிக்கு யார் குதிக்கிறார்கள் என போட்டி வைத்தனர். அதன்படி நயாத் மாபிசா மற்றொரு மாடிக்கு தாண்டும் போது 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நயாத் மாபிசா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர் ராமன் புதூரைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 38), கட்டிடத் தொழிலாளி. இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு வந்தார். மாலை வேலை முடிந்து நாகர்கோவிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இருளப்பபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிவசக்தி தூக்கி வீசப்பட்டார். தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் சிவசக்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சிவசக்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும், நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான சிவசக்தியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

    பலியான சிவசக்திக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே பழையபேட்டை நரசிம்மன்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). கட்டிட தொழிலாளி. இவர் தனது மொபட்டில் சம்பவத்தன்று நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக பெருமாள் வந்த மொபட்டு மீது மோதியது. இதில் தூக்கில் வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். 

    அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் இருந்த கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் வரும் வழியிலேயே உயிர் இழந்தார் என்று தெரிவித்தனர். 

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    களக்காடு அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவரும் இவரது நண்பருமான மாவடியை சேர்ந்த குமாரும் (20) நேற்று இரவில் மோட்டார்சைக்கில் களக்காட்டில் இருந்து மாவடிக்கு சென்றனர். சாலைப்புதூர் அடுத்த அண்ணா நகரில் சென்ற போது வள்ளியூரில் இருந்து களக்காடு நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார் படுகாயம் அடைந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குமாரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×