செய்திகள் (Tamil News)

நெல்லை அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

Published On 2017-07-21 13:04 GMT   |   Update On 2017-07-21 13:05 GMT
நெல்லை அருகே ஆற்றை கடந்த மூதாட்டி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

பாளையை அடுத்த கீழநத்தத்தை சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி ராசம்மாள்(வயது80). இவரது மகள் வீடு தாழையூத்து அருகே வண்ணான்பச்சேரியில் உள்ளது. அங்கு இவர் தினமும் செல்வார். அப்போது அவர் தாமிரபரணி ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் வரும் பகுதி வழியாக கடந்து செல்வது வழக்கம்.

கடந்த 18 ந் தேதி மகள் வீட்­டுக்கு செல்­வ­தற்கு வீட்டில் இருந்து ராஜம்மாள் புறப்பட்டார். ஆனால் அவர் மகள் வீட்­டுக்கு செல்­ல­வில்லை. தனது வீட்­டுக்கும் திரும்பி வர­வில்லை. இதனால் ராசம்மாளை அவரது குடும்­பத்­தினர் தேடி வந்­தனர். இந்த ­நி­லையில் செப்­பறை கோவில் அருகே ஆற்றில் ராசம்­மாள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று ராசம்மாள் உடலை மீட்­டனர். அவ­ரது உடல் அழுகிய நிலையில் காணப்­பட்­டது. ஆற்றைக் கடந்து வந்த போது­ அவர் தண்­ணீ­ரில் மூழ்கி இறந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News