செய்திகள்
பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘லேப்-டாப்’ வழங்கப்படுமா?: சட்டசபையில் சேகர்பாபு கேள்வி
கடந்த ஆண்டு படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘லேப்-டாப்’ வழங்கப்படுமா? என்று சட்டபேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சேகர்பாபு (தி.மு.க.) பேசுகையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி (லேப்-டாப்) வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கணினி வகுப்பை தேர்வு செய்த ஏழை-எளிய மாணவர்களுக்கு கணினி இல்லாததால் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘உயர்நீதிமன்றத்தில் தடை உள்ளதால் தடை நீக்கப்பட்ட பிறகு வழங்கப்படும்’ என்றார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சேகர்பாபு (தி.மு.க.) பேசுகையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி (லேப்-டாப்) வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கணினி வகுப்பை தேர்வு செய்த ஏழை-எளிய மாணவர்களுக்கு கணினி இல்லாததால் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு கணினி உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘உயர்நீதிமன்றத்தில் தடை உள்ளதால் தடை நீக்கப்பட்ட பிறகு வழங்கப்படும்’ என்றார்.