என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laptop"

    • எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும்
    • நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம்.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டனர்

    இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ""ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால் சொத்தை விற்றாவது படிக்க வைக்க வேண்டும் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. சினிமாவிற்கு செல்கிறேன் என அப்பாவிடம் சொன்னபோது, 'எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும். எனவே படி' என்றார்.

    அதன் பிறகு என்ஜினியரிங்கும் மாஸ்டர்ஸ்-உம் படித்தேன். கல்விதான் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு உதவுகிறது.

    விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கு கல்வியே உதவும். நான் அமெரிக்கா சென்று படிக்கும் பொழுது, அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் அங்கு பெரிய பொறுப்பில் இருந்தார்கள்.

    நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். ஏஐ வளர்ச்சி அடையும் கட்டத்தில் அரசு மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்குவது மிக முக்கியமான அம்சம்.

    இதை செய்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் வேலை பறிபோகும் என்கின்றனர். ஆனால் தொழில் முனைவோர் பலர், இந்தியாவில் இது வளர்ச்சியை தரும் என கூறுகின்றனர்" என்றார்" என தெரிவித்தார்.  

    • என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.
    • அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்த நிகழ்வில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ''வருங்காலத்தில் செயற்கை அறிவாளி, இயற்கை அறிவாளி என்று நிலை வரக்கூடும். அடுத்த தலைமுறையை சரியாக படிக்க வைக்க வேண்டும்.

    ஏன்? எதற்கு? எப்படி? என்ற அறிவார்ந்த கேள்விகளால் நம் மூளைக்கு உரம் சேர்க்க வேண்டும்.

    சிறு மடிக்கணினி தனிப்பட்ட முறையில் என்னை வளரச் செய்துள்ளது. என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.

    பணி ஓய்வுக்கு பின் பல அறிவியல் சார்ந்த துறை நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று பேசு வருகிறேன். கட்டுரைகள் எழுது வருகிறார். இவற்றுக்கு மடிக்கணினி எனக்கு உற்ற தோழனாக உள்ளது

    ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வெறும் கருவி அல்ல, அவை மாணவர்காளை சாதிக்கச் செய்யும் சக்தி ஆகும்.

    சாதி, மதம் என எதுவும் கல்விக்குத் தடையில்லை. ஆனால், மாறிவரும் கல்விச் சூழலில் தினம் தினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

    டிஜிட்டல் உலகிற்கு தடை இல்லை. மடிக்கணினி கையில் வந்தவுடன் மாணவர்கள் சர்வதேச உலகத்தோடு இணைகின்றனர். அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.

    ஏஐ தொழில்நுட்ப கல்வியை எடுத்துக்கொள்வதின் மூலம் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும்' என்று தெரிவித்தார்.  

    • தமிழர்களான நாம், எப்போதும் கடந்த கால பெருமைகளைப் பேசுவோம்; எதிர்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு தேங்கிவிட மாட்டோம்.
    • தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்துதான் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஐடி பாலிசி, டைடல் பார்க்குகளை கொண்டுவந்தார் கருணாநிதி.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 

    "மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும், நாடு வளரும். இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்து ஒட்டுமொத்த உலகமும் நம் கைகளில் எட்டக்கூடிய அளவில் உள்ளது. அதை உங்கள் கையில் கொடுப்பதுதான் நம் திராவிட மாடல் ஆட்சி. 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

    திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம். அதனால் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் நம் மாணவர்களுக்கு உடனடியாக கிடைக்கவேண்டும் என நம் ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்துதான் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஐடி பாலிசி, டைடல் பார்க்குகளை கொண்டுவந்தார் கருணாநிதி. அதனால்தான் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் உலகளவில் உயரிய பதவிகளில் உள்ளனர்.

    தமிழர்களான நாம், எப்போதும் கடந்த கால பெருமைகளைப் பேசுவோம்; எதிர்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு தேங்கிவிட மாட்டோம். அதற்கு உதாரணம்தான் இந்தவிழா. உங்கள் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையும் இயக்கம் செய்யப்பட்டால்தான் புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழும். தொழில்நுட்பம் வளரும். மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கக்கூடிய இரண்டாவது நெருப்புதான் ஏஐ. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்று உங்கள் கைகளில் மடிக்கணினிகள் கொடுத்திருக்கிறோம்.


    மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இன்று இருக்கும் இளைய சமுதாயம் மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க தமிழர்களாக உயர்ந்து நிற்கவேண்டும். எல்லோரையும் வாழவைக்க வேண்டும். இதுதான் என்னுடைய எண்ணம். இது செலவுத்திட்டம் அல்ல. கல்விக்கான முதலீடு. நீங்கள் படிப்பதற்கான எல்லா திட்டங்களையும் உருவாக்கி தருகிறோம். படித்து உங்கள் எதிர்காலத்தை நல்லப் பாதையாக தேர்ந்தெடுங்கள். பட்டப்படிப்பு மட்டும் போதாது. வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நீங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கவேண்டும். தொழில்நுட்பத்தை படிப்பது என்பது ஆப்சன் கிடையாது. அதனை முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும்.

    ஏஐ மனிதர்களுக்கு மாற்று கிடையாது. நம் வேலைகளை சிறப்பாக செய்ய நமக்கு துணைநிற்கும். கடந்த தலைமுறையினர் அறிவை வளர்க்க புத்தகத்தை தேடி அலையவேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த வளர்ச்சியை குறைசொல்லி முடங்கிப்போவது முட்டாள்களின் பாதை. இதை பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தை தொடவேண்டியதுதான் உங்களின் வேலை.

    இப்போது வாங்கும் மடிக்கணினிகளை படம் பார்ப்பதற்கு பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்கள் வேலைக்கான மூலதனமாக பார்க்கப் போகிறீர்களா? இதுதான் எங்கள் கேள்வி. எல்லாவற்றிலும் நன்மை, தீமை என இரண்டும் பக்கம் இருக்கிறது. உங்கள் வேலை எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள்தான் முதலிடத்தில் இருக்கவேண்டும். உலகத்தோடு போட்டிப் போடுங்கள். அதற்கான கருவிதான் உங்கள் கையில் கொடுக்கிறோம். 

    நான் எப்போதும் சொல்வதுதான். படிங்கள், படிங்கள், படிங்கள். உங்களை பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கும். தமிழ்நாட்டிற்கு இன்னும் வளர்ச்சி வேண்டும். உங்கள் கையில்தான் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு வெல்லட்டும்" என தெரிவித்தார். 

    • 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.

    முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

    பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

    • லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.
    • தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    சட்டசபை தேர்தல் வர உள்ளதால் மடிக்கணினி தர உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    * மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

    * சில வாரங்களில் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வியின் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்.

    * திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு நிச்சயமாக மடிக்கணினி வழங்கத்தான் போகிறது.

    * மாணவர்கள் பயன்பெறும் திட்டத்துக்கு எதிராக அவதூறை பரப்ப வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.

    * லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.

    * எடப்பாடி பழனிசாமி அல்ல அவர்களது டெல்லி ஓனர் நினைத்தாலும் மாணவர்களுக்கு லேப்டாப் தருவதை தடுக்க முடியாது.

    * Windows 11 OS உடன் உயர்தரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.

    * அதிவேக Processor மற்றும் அதிகநேரம் தாங்கும் பேட்டரியுடன் லேப்டாப் உள்ளது.

    * தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.

    * பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    * மடிக்கணினி திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
    • உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.

    இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.

    மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.

    தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.

    எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    • 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.
    • 2025 - 26 நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு வழங்க, மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.

    தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மடிக்கணினி திட்டம் என்ற உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

    2019 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்த திட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களுடன் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.

    2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம். 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி.எஸ்.எஸ்.டி. கொண்ட ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட வகையில் இந்த மடிக் கணினி இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • சியோமி நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மூன்று ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ரெட்மி பிராண்டிங்கில் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் சியோமி புக் ஏர் 13 மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சியோமி லேப்டாப், ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி புதிய ரெட்மி டிவி, ரெட்மி ப்ரோஜெக்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர் போன்ற சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.

    புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சியோமி புக் ஏர் 13 மாடலில் 13.3 இன்ச் 2880x1800 பிக்சல் E4 OLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், VESA டிஸ்ப்ளே HDR500 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 2-இன்-1 டிசைன் மற்றும் 360 டிகிரி ஹின்ஜ், டச் சப்போர்ட் உள்ளது.

    இதனால் புதிய சியோமி புக் ஏர் 13 மாடலை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பில் 6-சீரிஸ் அலுமினியம் அலாய், CNC கார்விங் வழிமுறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை மற்றும் அளவு முறையே 1.2 கிலோ மற்றும் 12mm ஆகும்.

    இந்த லேப்டாப்பில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, டூயல் யூனிட் மைக்ரோபோன்கள், பேக்லிட் கீபோர்டு, கிளாஸ் டச்பேட், பவர் பட்டனில் கைரேகை சென்சார், 8MP கேமரா, 12th Gen இண்டெல் கோர் ஐ7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe GPU, அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் 58.3 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் விண்டோஸ் 11 ஒஎஸ், வைபை 6E, ப்ளூடூத் 5.2, இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    சீன சந்தையில் சியோமி புக் ஏர் 13 மாடலின் விலை RMB 4999, இந்திய மதிப்பில் ரூ. 56 ஆயிரத்து 925 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப் வைட் நிறத்தில் கிடைக்கிறது.

    • அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய லேப்டாப்கள் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அசுஸ் இந்தியா நிறுவனம் ஆறு புதிய லேப்டாப் மாடல்களை பிரீமியம் எக்ஸ்பர்ட்புக் சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லேப்டாப்கள் B5, B7, B2, B3 மற்றும் 12th Gen B9 மற்றும் B1 என அழைக்கப்படுகின்றன. ஹைப்ரிட் வொர்க் முறையை கருத்தில் கொண்டு வொர்க்ஸ்டேஷன் மற்றும் கன்வெர்டிபில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புது லேப்டாப்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த லேப்டாப்கள் நீடித்த ப்ரோடக்டிவிட்டி மற்றும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றில் பில்ட்-இன் கைரேகை சென்சார், face recognition வசதிக்காக IR கேமரா, வெப்கேமரா, டேட்டா செக்யுரிட்டிக்காக டிரஸ்டட் பிளாட்ஃபார்ம் மாட்யுல் (TPM) 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்பர்ட்புக் B5 சீரிஸ் மாடல்களில் இண்டெல் 12th Gen CoreTM i7-P சீரிஸ் 28W பிராசஸர், தண்டர்போல்ட் 4, ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், அதிகபட்சம் 40 ஜிபி குயிக் DDR ரேம், வைபை 6 சப்போர்ட் உள்ளிட்டவை எக்ஸ்பர்ட் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் 14 இன்ச் FHD+ ஸ்கரீன், ஆண்டி-கிலேர் கோட்டிங் உள்ளது. B5 ஃப்ளிப் மாடலில் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்டெப்லெஸ் கன்வெர்டிபில் ஹின்ஜ் உள்ளது.

    எக்ஸ்பர்ட்புக் B7 ஃப்ளிப் மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் அதிநவீன 12th Gen இண்டெல் கோர் i7 28-வாட் P சீரிஸ் பிராசஸர், வைபை 6, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 இன்ச் QHD+ 2560x1600 பிக்சல் ஆண்டி கிலேர் டச் ஸ்கிரீன், அசுஸ் பென், 360-டிகிரி ஹின்ஜ் உள்ளது.

    எக்ஸ்பர்ட்புக் B2 மாடல் கிளாம்ஷெல் டிசைன் அல்லது ஃப்ளிப் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் முறையே 15.6 இன்ச் அல்லது 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 12th Gen இண்டெல் கோர் vப்ரோ பிராசஸர்கள் உள்ளன. இத்துடன் பேக்லிட் கீபோர்டு, IR HD வெப்கேமரா, ஸ்மார்ட் கார்டு ரீடர், ஹார்டுவேர் TMP 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்பர்ட்புக் B3 ஃப்ளிப் 14 இன்ச் ஸ்கிரீன், TUV ரெயின்லாந்து சான்று, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், 360 டிகிரி டேப்லெட் மோட், ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கீபோர்டு, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B9 மாடலில் 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 5200 ரேம், அதிகபட்சம் ட்வின் 2TB எஸ்எஸ்டி, இண்டெல் வைபை 6 வழங்கப்பட்டுள்ளது.

    • சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புது லேப்டாப் மாடலில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது.
    • இதனை லேப்டாப் மட்டுமின்றி இதனை டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது புது லேப்டாப் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த லேப்டாப் தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதிய சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் உள்ள 360 டிகிரி ஹின்ஜ் இதனை லேப்டாப் அல்லது டேப்லெட் போன்று பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் குவால்காம் நிறுவன பாகங்கள் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கிராஃபிக்ஸ், பிராசஸர், வைபை கனெக்‌ஷன் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை குவால்காம் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

    இந்த லேப்டாப்பில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 33.7செமீ டச் ஸ்கிரீன், 11.5mm தடிமனாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 1.04 கிலோ ஆகும். சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடலில் ஸ்னாப்டிராகன் 8cx ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட 57 சதவீதம் வரை அதிக செயல்திறன் மற்றும் 85 சதவீதம் சிறப்பான மல்டி-டாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது.

    கூடுதலாக குவால்காம் அட்ரினோ GPU வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு குவால்காம் நிறுவனத்தின் ஃபாஸ்ட்கனெக்ட் 6900 சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிவேக மற்றும் சீரான வைபை 6E கனெக்‌ஷன் வழங்கப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை இந்த சாதனத்தை முழு சார்ஜ் செய்தால் 35 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தில் சாம்சங் நிறுவனத்தின் S பென் ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 மாடல் கிராஃபைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1.89 மில்லியன் வொன் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 585 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தென் கொரிய சந்தையில் இதன் விற்பனை ஜனவரி 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதனங்கள் மட்டுமின்றி லேப்டாப் பிரிவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை கேலக்ஸி லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே சாம்சங் நிறுவனம் லேப்டாப் பிரிவிலும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. 2023 வாக்கில் சாம்சங் புதிய தலைமுறை கேலக்ஸி லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி லேப்டாப்களில் மேம்பட்ட ஹார்டுவேர், சிறப்பான சாஃப்ட்வேர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை லேப்டாப்களை கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வு பிப்ரவரி 2023 மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது. பல்வேறு ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களை அறிமுகம் செய்வதால் இந்த நிகழ்வு வழக்கத்தை விட நீண்ட நேரம் நடைபெறலாம்.

    புதிய ஹை-எண்ட் லேப்டாப் மாடல்களில் மேம்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம். புதிய கேலக்ஸி புக் லேப்டாப்களில் இண்டெல் நிறுவனத்தின் 13th Gen பிராசஸர்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்கள், பில்ட்-இன் S பென் ஸ்டைலஸ், பிரத்யேக GPU உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.

    கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட் உள்ளிட்டவைகளுடன் பயன்படுத்தும் போது கூடுதல் அம்சங்களை மென்பொருள் பிரிவில் வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய லேப்டாப்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புது மேக்புக் ஏர் வெளியீடு பற்றி இணையத்தில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • இதுதவிர புதிய ஏர்பாட்ஸ் மாடல் உருவாகி வருவதாகவும், இதன் விலை சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் அளவில் சிறிய 12 இன்ச் மாடல் மற்றும் பெரிய 15 இன்ச் மாடலும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 12 இன்ச் மாடல் இந்த ஆண்டு அறிமுகமாகாது என்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிஸ்ப்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங், ஆப்பிள் நிறுவனம் 15.5 இன்ச் டிஸ்ப்ளே பேனல்களை உருவாக்கும் பணிகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கி விடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கான தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை எனில், புது மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும்.

    சமீபத்தில் தான் மேக்புக் ஏர் மாடல் பெருமளவு அப்டேட் செய்யப்பட்டது என்ற காரணத்தால் ஆப்பிள் இம்முறை புது மேக்புக் ஏர் டிசைனை பெருமளவுக்கு மாற்றாது என்றே தெரிகிறது. அதன்படி புது மேக்புக் ஏர் டிசைன் அதன் தற்போதைய மாடல்களை போன்றே காட்சியளிக்கும். மற்ற அம்சங்களை பொருத்தவரை இதில் M2 சிப் அல்லது M2 ப்ரோ பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இரு பிராசஸர்களையும் ஆப்பிள் இதுவரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் புதிய M2 சிப்செட் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு புதிய மேக் சாதனங்களில் இந்த சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது 2024 வாக்கில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் என கூறப்பட்ட 12 இன்ச் மேக்புக் ஏர் மாடல் தற்போதைக்கு விரைந்து அறிமுகம் செய்யப்படாது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

    ×