செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-07-12 11:45 GMT   |   Update On 2017-07-12 11:45 GMT
கிருஷ்ணகிரி அருகே தனக்குத்தானே கழுத்தை கத்தியால் அறுத்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தானம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் விவசாயி. இவரது மகன் கார்த்தி(வயது 19). இவர் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்கி கொண்டிருந்தார். இன்று காலை எழுந்து பார்த்தபோது அவர் அறையில் காணவில்லை. உடனே அவரை ராமகிருஷ்ணன் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது கார்த்தி அருகில் உள்ள தோட்டத்தில் கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து ராம கிருஷ்ணன் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்த்தி தனக்குத்தானே கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அவர் என்ன காரணத்திற்காக கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்தார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News