செய்திகள்

உடுமலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-06-25 14:53 GMT   |   Update On 2017-06-25 14:55 GMT
உடுமலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடுமலை:

உடுமலை பழனிரோடு நாராயணன் காலனியை சேர்ந்தவர் சையது. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரபியா. இவர்களது மகள் சனிபிபி (வயது 16). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று சனிபிபி மட்டும் வீட்டில் இருந்தார். வெளியே சென்ற பெற்றோர் மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உள் பக்கமாக தாழ்போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவை திறக்கவில்லை.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கூரையை பிரித்து பார்த்தபோது சனிபிபி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் கிடைத்தும் உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News