திருப்புல்லாணியில் பெண் தீக்குளித்து தற்கொலை
ராமநாதபுரம்:
திருப்புல்லாணி அருகே உள்ள பத்திராதரவையை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சுகமதி (வயது42). மனநிலை பாதிக்கப்பட்ட இவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகமதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் மகாசக்தி நகரைச் சேர்ந்தவர் அரியமுத்து (60). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த சில நாட்களாக இவரது மனைவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அரியமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.