செய்திகள்

பரமத்தி வேலூர் பஸ் நிலைய வளாகத்தில் புகைப்படக் கண்காட்சி

Published On 2017-06-23 16:55 GMT   |   Update On 2017-06-23 16:55 GMT
பரமத்தி வேலூர் பஸ் நிலைய வளாகத்தில் புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வேலூர் பஸ் நிலைய வளாகத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியினை பஸ் நிலையத்திற்கு வருகை தந்த ஏராளமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இப்புகைப் படக்கண் காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களின் தொகுப்பு, புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களின் தொகுப்பு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களின் தொகுப்பு, புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களின் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

இப்புகைப்பட கண்காட்சியினை பஸ் நிலையத்திற்கு வருகை தந்த ஏராளமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை எளிதில் அறிந்து கொள்ள முடிகின்றது என்றும் பெருமையுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மோகன்ராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) கலைமாமணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News