கொடைக்கானல் பகுதியில் பிளம்ஸ் சீசன் தொடக்கம்
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்லும் பழங்களில் பிளம்ஸ் முக்கியமானதாகும். லேசான புளிப்பு சுவையுடன் இனிப்பாக இருப்பதால் இதனை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
கேரளா, சென்னை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரட் ஜாமிற்கு பிளம்ஸ் பழம் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. கொடைக்கானலில் ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரை பிளம்ஸ் சீசன் இருக்கும்.
அதன்படி தற்போது பிளம்ஸ் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் அதிக அளவு பிளம்ஸ் வரத்தொடங்கி உள்ளது. தனியார் தோட்டங்களில் காய்த்துள்ள பழங்களை சாலையோர கடைகள் அமைத்து விற்கப்படுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.65-க்கு விற்கப்படுகிறது.
வரும் காலங்களில் பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் அதிகரிக்க கூடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.