செய்திகள்
அய்யம்பேட்டை அருகே தொழிலாளி தற்கொலை
அய்யம்பேட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு புதுகாலனி தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட லெட்சுமணன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மகன் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு புதுகாலனி தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வீட்டில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட லெட்சுமணன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மகன் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.