செய்திகள்
தேனி அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
தேனி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கார்கில் சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது67). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த விவசாயி வீட்டிற்கு 7 வயது சிறுமி விடுமுறைக்காக வந்திருந்தார்.
2-ம் வகுப்பு படிக்கும் மாணவியான அந்த சிறுமியிடம் நடராஜன் அடிக்கடி ஆசைவார்த்தைகள் பேசி தகாத முறையில் நடக்க முயன்றார். சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் மின்சாரம் தடைபடவே அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த சிறுமி அழுதுகொண்டே நடந்த விபரங்களை தனது பாட்டியிடம் தெரிவித்தார்.
இது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.