செய்திகள்

வியாசர்பாடியில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொடூர கொலை

Published On 2017-05-24 08:47 GMT   |   Update On 2017-05-24 08:47 GMT
வியாசர்பாடியில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

வியாசர்பாடி, கணேசபுரம் ரெயில்வே பாலம் அருகே உள்ள தண்ட வாளத்தில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது தலை முழுவதும் பெரிய கல்லை தூக்கி போட்டு நசுக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வியாசர்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை யுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.கொலையுண்டவர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 24 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை நடந்தது. இதற்கிடையே இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News