செய்திகள்
அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பில் 4 மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதி
அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பில் மாணவ- மாணவியர் 4 பேருக்கு கல்வி கட்டணத்திற்கான நிதியுதவியாக, கழக கணக்கில் இருந்து 2,15,000 ரூபாய்க்கான வரைவோலைகள் வழங்கப்பட்டன.
சென்னை:
அ.தி.மு.க. (அம்மா) தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் இன்று காலை 10.15 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் மாணவ- மாணவியர் 4 பேருக்கு கல்வி கட்டணத்திற்கான நிதியுதவியாக, கழக கணக்கில் இருந்து 2,15,000 ரூபாய்க்கான வரைவோலைகள் வழங்கப்பட்டன.
இதை மாணவ- மாணவிகள் ஆயிரம்விளக்கு பி.அரவிந்தா, கிருஷ்ணகிரி மாவட்டம், துரிஞ்சிப்பட்டி கே.கணேசன், புதுக்கோட்டை எஸ்.கார்த்திக், சேலம் வி.ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இவை தவிர, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றியம், ராவத்தன்பட்டி அ.தி.மு.க. கிளைக் கழகச் செயலாளர் வேலுச்சாமி குடும்பத்திற்கு குடும்ப நல நிதியுதவியாக கழகக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய்க்கான வரைவோலை வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. (அம்மா) தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் இன்று காலை 10.15 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் மாணவ- மாணவியர் 4 பேருக்கு கல்வி கட்டணத்திற்கான நிதியுதவியாக, கழக கணக்கில் இருந்து 2,15,000 ரூபாய்க்கான வரைவோலைகள் வழங்கப்பட்டன.
இதை மாணவ- மாணவிகள் ஆயிரம்விளக்கு பி.அரவிந்தா, கிருஷ்ணகிரி மாவட்டம், துரிஞ்சிப்பட்டி கே.கணேசன், புதுக்கோட்டை எஸ்.கார்த்திக், சேலம் வி.ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இவை தவிர, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றியம், ராவத்தன்பட்டி அ.தி.மு.க. கிளைக் கழகச் செயலாளர் வேலுச்சாமி குடும்பத்திற்கு குடும்ப நல நிதியுதவியாக கழகக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய்க்கான வரைவோலை வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.