செய்திகள்

பாகூர் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2017-04-24 15:03 GMT   |   Update On 2017-04-24 15:03 GMT
பாகூர் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மனைவி வசந்தா (வயது55). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு வசந்தாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டார்.

இன்று காலை குடும்பத்தினர் பார்த்த போது வசந்தா பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். அருகில் பூச்சி கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி- சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகூர் அருகே குருவிநத்தம் வாழப்பட்டு செல்லும் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேலு (74) இவர் வயது முதிர்ச்சியாலும் நோய் கொடுமையாலும் அவர் சில நாட்களாக அவதியடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த கதிர்வேலு நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News