செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 24 அடியாக சரிவு

Published On 2017-04-21 11:18 GMT   |   Update On 2017-04-21 11:18 GMT
பருவ மழைகள் பொய்த்ததாலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

மேட்டூர்:

பருவ மழைகள் பொய்த்ததாலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 24.54 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 26 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

இதனால் வரும் நாட்களில் மேட்டூர் அணையை நம்பி உள்ள குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.

Similar News