செய்திகள்

கார் மோதி விபத்து: பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு கால்முறிவு

Published On 2017-04-17 13:52 GMT   |   Update On 2017-04-17 13:52 GMT
பைக் மீது கார் மோதிய விபத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு காரைக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
காரைக்கால்:

நன்னிலம் தாலுகா, பூந்தோட்டம் சின்ன மில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வம்(57). காரைக்காலில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

அவர் மதகடியிலிருந்து கடற்கரை சாலையில் தனது மொபட்டில் காமராஜர் சாலையை கடந்தபோது திருநள்ளாறுக்கு வந்து விட்டு நாகப்பட்டினம் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த தமிழ்ச்செல்வத்திற்கு இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அது போன்று கார் டிரைவரான காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த குணசீலன்(25) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து தமிழ்ச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் முத்து சாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News