செய்திகள்

கிருஷ்ணகிரியில் வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை திருட்டு

Published On 2017-04-17 11:29 GMT   |   Update On 2017-04-17 11:29 GMT
கிருஷ்ணகிரியில் தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள ராஜீவ்நகர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன்(35). இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சென்றுள்ளார். பின்னர் 15-ந்தேதி மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலை இருந்துள்ளது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News