செய்திகள்

மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரசாரம்

Published On 2017-03-27 09:39 GMT   |   Update On 2017-03-27 09:39 GMT
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்த அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தண்டையார்பேட்டையில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். காசிமேடு நாகூரான் தோட்டத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கி வீதி வீதியாக மக்களை சந்திக்கிறார்.

இரட்டை மின் விளக்கு சின்னத்துக்கு ஆதரவு கேட்டு இன்று முதல் அவரது ஆதரவாளர்கள் பிரசார களத்தில் இறங்குகிறார்கள். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், மா.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை எம்.எல்.ஏ., பி.எச்.பாண்டியன் மற்றும் சிறுபான்மை நலப்பிரிவு துணைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக பிரசார வியூகத்தை அவர்கள் அமைத்துள்ளதால் தேர்தல் களம் இனி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News