செய்திகள்

தூத்துக்குடியில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளிக்கு வலைவீச்சு

Published On 2017-03-25 16:15 GMT   |   Update On 2017-03-25 16:15 GMT
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் பூல்பாண்டி. இவரது மனைவி லெட்சுமி (48). இவர்களது மகன் முருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன், பாலசுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பூல்பாண்டி வீட்டிற்கு பாலசுப்பிரமணியன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த லெட்சுமியிடம், முருகன் எங்கே? என்று கேட்டுள்ளார். அதற்கு லெட்சுமி சரியாக பதில் சொல்லாததால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

இதில் படுகாயம் அடைந்த லெட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

Similar News