செய்திகள்

வில்லியனூர் அருகே மூதாட்டி மாயம்

Published On 2017-03-20 12:49 GMT   |   Update On 2017-03-20 12:49 GMT
வில்லியனூர் அருகே நகையை அடகு வைத்து செலவு செய்ததை மகன் கண்டித்ததால் மூதாட்டி மாயமானார். இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே அரும்பார்த்தபுரம் மணவெளி திரிவேணி நகரை சேர்ந்தவர் பாலு. இவருடைய மனைவி கமலி (வயது60). இவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் நகையை அடகு வைத்து செலவு செய்ததாக தெரிகிறது.

இதனை அவரது மகன் செந்தில்குமரன் கண்டித்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்த கமலி சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் கமலி இல்லை.

இதையடுத்து செந்தில்குமார் தனது தாய் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News