செய்திகள்

மதுரை அழகப்பன் நகரில் அரசு பஸ்சில் சிக்கி வாலிபர் பலி: டிரைவர் கைது

Published On 2017-03-20 10:09 GMT   |   Update On 2017-03-20 10:09 GMT
மதுரை மோட்டார் சைக்கிள் விபத்தில் கீழே விழுந்த வாலிபர், அரசு பஸ்சில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை பைக்காரா புது மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் வசந்த் (வயது 21). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அழகப்பன் ரெயில்வே கேட் அருகில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், வசந்த் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய வசந்த் கீழே விழுந்தார். அப்போது அந்த வழி யாக வந்த அரசு பஸ், கண்இமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி வசந்த் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்தனர்.

Similar News