செய்திகள்

விபத்து, அவசர சிகிச்சை அளிப்பதில் நாட்டின் சிறந்த மருத்துவமனையாக புதுவை ஆஸ்பத்திரி தேர்வு

Published On 2017-03-15 08:41 GMT   |   Update On 2017-03-15 08:41 GMT
நாட்டின் சிறந்த மருத்துவமனையாக புதுச்சேரியின் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

விபத்து மற்றும் அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் இம்மருத்துவமனையை நாட்டின் சிறந்த மருத்துவமனையாக மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இந்த மருத்துவமனையை மேம்படுத்திட மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் புது டெல்லியில் நேற்று புதுச்சேரி சுகாதாரத்துறை மந்திரி மல்லாடி கிருஷ்ண ராவ் முன்னிலையில் கையெழுத்தானது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் இதற்கான தொகையை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணத்தை வைத்து அவசர சிகிச்சை பிரிவின் வசதிகளை மேம்படுத்திட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Similar News