செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்குகிறது

Published On 2017-03-08 23:21 GMT   |   Update On 2017-03-08 23:21 GMT
சி.பி.எஸ்.இ. 10-வது மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. 10-வது வகுப்பு தேர்வு தொழில்நுட்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது.
சென்னை:

சி.பி.எஸ்.இ. 10-வது மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகின்றன. 10-வது வகுப்பு தேர்வு தொழில்நுட்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 3 ஆயிரத்து 974 மையங்களில் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதுகிறார்கள். 12-வது வகுப்பு தேர்வை 3 ஆயிரத்து 503 மையங்களில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். 12-ம் வகுப்பு தேர்வு ஆங்கில விருப்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் 10-வது வகுப்பு தேர்வை 40 ஆயிரத்து 300 பேர்களும், 12-வது வகுப்புதேர்வை 15 ஆயிரத்து 450 பேர்களும் எழுதுகிறார்கள். 10-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ந் தேதியும், 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ந் தேதியும் முடிவடைகின்றன. 

Similar News