செய்திகள்

அனுமதி இன்றி ஆற்று மணல் திருடியவர் கைது

Published On 2017-03-01 17:08 GMT   |   Update On 2017-03-01 17:08 GMT
திண்டுக்கல்லில் அனுமதி இன்றி ஆற்று மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் உதவி சுங்கத்துறை இயக்குனர் சசிக்குமார் தலைமையிலான அலுவலர்கள் இன்று எம்.எம். கோவிலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது டிராக்டரில் மணல் அள்ளி வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரை வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் குழந்தைப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கருப்பண்ணன் (வயது 33) என்பதும் அனுமதியின்றி ஆற்று மணலை திருட்டு தனமாக அள்ளி வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

Similar News