செய்திகள்

நாராயணசாமி டெல்லி பயணம் திடீர் ரத்து

Published On 2017-03-01 10:00 GMT   |   Update On 2017-03-01 10:00 GMT
நாராயணசாமி டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் தங்கி இருந்த நாராயணசாமி அண்ணா அறிவாலயத்துக்கு சென்று அங்கு மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக நேற்று மாலை அவர் சென்னைக்கு காரில் சென்றார்.

அங்கிருந்து இன்று காலை விமானம் மூலம் அவர் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், அவரது டெல்லி பயணம் திடீரென ரத்தானது.

டெல்லியில் சென்னை துறைமுக கழகத்துடன் புதுவை அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருந்தது.

இந்த ஒப்பந்தம் மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த ஒப்பந் தத்துக்கான நிகழ்ச்சி திடீரென ரத்தானது. இதனால் நாராயணசாமி டெல்லி செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று அங்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவருடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.

Similar News