செய்திகள்
கேணிக்கரை அருகே கார் மோதி வக்கீல் பலி
கேணிக்கரை அருகே கார் மோதிய விபத்தில் வக்கீல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அருகே உள்ள கடம்பாநகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (வயது50), வக்கீல். இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைசாலை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவிபட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கார் சென்றது. அந்த கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் அரிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் சக்தி ராஜேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஷாஜி (41)யிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அருகே உள்ள கடம்பாநகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (வயது50), வக்கீல். இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைசாலை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவிபட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கார் சென்றது. அந்த கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் அரிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் சக்தி ராஜேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஷாஜி (41)யிடம் விசாரணை நடத்தி வருகிறார்.