செய்திகள்

தஞ்சை அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார்

Published On 2017-02-21 09:20 GMT   |   Update On 2017-02-21 09:20 GMT
திருமணமான 12 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள மருங்குளம் சுந்தரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருக்கும் தஞ்சை விளார் ரோடு அன்பு நகரை சேர்ந்த சந்தானம் மகள் கார்த்திகா (21) வுக்கும் கடந்த 6.2.17 அன்று திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கார்த்திகா தனது தந்தை வீட்டிற்கு வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாக 12 நாட்களில் புதுப்பெண் இறந்ததால் தஞ்சை ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Similar News