செய்திகள்
ராணிப்பேட்டை சிப்காட்டில் காவலாளி மர்ம மரணம்
ராணிப்பேட்டை சிப்காட் தனியார் கம்பெனியில் வேலை பார்த்த காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலாஜா:
ராணிப்பேட்டை அக்ரவாரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 56). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனியில் காவலாளியாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.
நேற்று இரவு பணி செய்தார். இன்று காலை பார்த்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.