செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 34 அடியாக சரிந்தது
கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தியதாலும், காவிரி பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்து போனதாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 34 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தியதாலும், காவிரி பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்து போனதாலும் அணைக்கு தண்ணீர் வரத்து 56 கனஅடியாக குறைந்து சரிந்து காணப்படுகிறது.
குடிநீருக்காக அணையில் இருந்து 450 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர்வரத்தை விட குடிநீருக்காக அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம 34.86 அடியாக குறைந்து காணப்படுகிறது.