செய்திகள்
நாளை கடை அடைப்பு போராட்டம்: த.வெள்ளையன் பேட்டி
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் நாளை கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளதாக த.வெள்ளையன் கூறி உள்ளார்.
சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் வணிகர்கள் அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைக்க இருக்கிறோம். மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் நாங்கள் மேற்கொள்கிறோம். தமிழகம் முழுவதிலும் 40 லட்சம் கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் வணிகர்கள் அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைக்க இருக்கிறோம். மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் நாங்கள் மேற்கொள்கிறோம். தமிழகம் முழுவதிலும் 40 லட்சம் கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.