செய்திகள்
பூதப்பாண்டி அருகே தொழிலாளியை வெட்டி கொல்ல முயற்சி: பிரபல ரவுடி கைது
தொழிலாளியை வெட்டி கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது நேசமணி நகர் போலீசில் அடிதடி வழக்கு, கத்திகுத்து உள்பட பல வழக்குகளும் உள்ளது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றோ ஜெலஸ்டின் (வயது 43). தொழிலாளி. நேற்று துவரங்காடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ்(22) என்பவர் அங்கு வந்தார். அவர் ஆன்றோ ஜெலஸ்டினிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.ஆனால் ஆன்றோ ஜெலஸ்டின் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்பிரகாஷ் தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆன்றோ ஜெலஸ்டினை வெட்டினார்.
இதில் சுதாரித்து கொண்ட அவர் அரிவாள் வெட்டில் இருந்து தப்பினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து ஆன்றோ ஜெலஸ்டின் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பென்சாம், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரகாஷ் பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருள் பிரகாஷ் நேற்று முன் தினம் ஆரல்வாய்மொழி பகுதியில் பழனி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது நேசமணி நகர் போலீசில் அடிதடி வழக்கு, கத்திகுத்து உள்பட பல வழக்குகளும் உள்ளது.
பூதப்பாண்டி அருகே சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றோ ஜெலஸ்டின் (வயது 43). தொழிலாளி. நேற்று துவரங்காடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ்(22) என்பவர் அங்கு வந்தார். அவர் ஆன்றோ ஜெலஸ்டினிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.ஆனால் ஆன்றோ ஜெலஸ்டின் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்பிரகாஷ் தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆன்றோ ஜெலஸ்டினை வெட்டினார்.
இதில் சுதாரித்து கொண்ட அவர் அரிவாள் வெட்டில் இருந்து தப்பினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து ஆன்றோ ஜெலஸ்டின் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பென்சாம், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரகாஷ் பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருள் பிரகாஷ் நேற்று முன் தினம் ஆரல்வாய்மொழி பகுதியில் பழனி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது நேசமணி நகர் போலீசில் அடிதடி வழக்கு, கத்திகுத்து உள்பட பல வழக்குகளும் உள்ளது.