செய்திகள்

செம்மரம் கடத்தல் தகராறில் வாலிபர் கொலை: மேலும் ஒருவர் கைது

Published On 2017-01-04 10:10 GMT   |   Update On 2017-01-04 10:10 GMT
செம்மரம் கடத்தல் தகராறில் வாலிபர் கொலை வழக்கில் சென்னை ரவுடி கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அருகே கடந்த 2015-ம் ஆண்டு செம்மர ஏஜெண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை ரவுடி கும்பலை சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்த செம்மர கடத்தல் ஏஜெண்டு அசோகன். இவரது கூட்டாளிகள் கதிரவன், அப்புக்கல்லை சேர்ந்த பிரகாஷ் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி 3 பேரையும் சென்னையை சேர்ந்த ரவுடி கும்பல் கடத்தி சென்றனர்.

ரூ.3 கோடி பணம் கேட்டு அவர்களை அடித்து உதைத்தனர். கடத்தப்பட்ட 3 பேரையும் வேலூர் தாலுகா போலீசார் மீட்டனர். கும்பல் தாக்குதலில் காயமடைந்த அப்புக்கல் பிரகாஷ் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவுடி ஜெய் என்கிற ஜெயக்குமார், ராஜேஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களது கூட்டாளி எண்ணூர் சுனாமிகுடியிருப்பை சேர்ந்த ஆட்டோ ராஜா (வயது 25) தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆட்டோ ராஜா எண்ணூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன் தலைமையிலான போலீசார் சென்னை சென்று ஆட்டோ ராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News