செய்திகள்

பணகுடி அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

Published On 2016-12-26 12:15 GMT   |   Update On 2016-12-26 12:15 GMT
பணகுடி அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாம்பன்குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு பணகுடி போலீசார் மற்றும் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் பணகுடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த வேலாயுதபெருமாள் (வயது 55) என்பது தெரிய வந்தது. அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News