செய்திகள்
ஆட்டோ டிரைவர் கொலை: ரவுடியை பிடிக்க தனிப்படை
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடியை பிடிக்க அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் நல்லு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம்:
அவனியாபுரம் மூன்று மாடி காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது33), ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ரவுடி ஞானவேல்பாண்டியனை தேடி வருகின்றனர். இவர் மீது கமுதி, அபிராமம், அவனியாபுரம் உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, முயற்சி வழக்குகள் உள்ளன.
தலைமறைவாகி விட்ட அவரை பிடிக்க அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் நல்லு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர், கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஞானவேல் பாண்டியனை தேடி வருகின்றனர். மேலும் அவரது கூட்டாளிகள், உற வினர்களிடமும் விசாரணை நடக்கிறது.
அவனியாபுரம் மூன்று மாடி காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது33), ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ரவுடி ஞானவேல்பாண்டியனை தேடி வருகின்றனர். இவர் மீது கமுதி, அபிராமம், அவனியாபுரம் உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, முயற்சி வழக்குகள் உள்ளன.
தலைமறைவாகி விட்ட அவரை பிடிக்க அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் நல்லு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர், கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஞானவேல் பாண்டியனை தேடி வருகின்றனர். மேலும் அவரது கூட்டாளிகள், உற வினர்களிடமும் விசாரணை நடக்கிறது.